உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 2 வீடுகளின் பூட்டை உடைத்து  ரூ.3 லட்சம் நகைகள் திருட்டு 

2 வீடுகளின் பூட்டை உடைத்து  ரூ.3 லட்சம் நகைகள் திருட்டு 

கடலுார்:கடலுார், செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் ராமு, 43; இவர், நேற்று முன்தினம், குடும்பத்துடன் அய்யம்பேட்டையில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றார். நேற்று காலை திரும்பி வந்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு 3 சவரன் நகை, 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. அதனைத் தொடர்ந்து, மாடியில் உள்ள மாமியார் வீட்டிலும் பீரோ உடைக்கப்பட்டு 3 சவரன் நகை மற்றும் 40,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். திருடுபோன நகைகள் மதிப்பு 3 லட்சம் ரூபாய் ஆகும். தகவலறிந்த கடலுார், முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.புகாரின்படி, முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை