உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகன் இறந்த துக்கம்; தாய் தற்கொலை 

மகன் இறந்த துக்கம்; தாய் தற்கொலை 

விருத்தாசலம் : விருத்தாசலம் முல்லாதோட்டம் பகுதியைசேர்ந்தவர் கணேசன் மனைவி பஞ்சவர்ணம், 40. இவரது மகன் பிரதீப்குமார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மாரடைப்பால் இறந்து விட்டார்.இதில் மன உளைச்சலில் இருந்த பஞ்சவர்ணம், கடந்த 10ம் தேதி தனது மேல் டீசலை ஊற்றி தீக்குளித்தார். இதில், படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு,விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் மேல்சிகிச்சைக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை