உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் மோதி மூதாட்டி சாவு

பைக் மோதி மூதாட்டி சாவு

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே பைக் மோதி மூதாட்டி இறந்தார்.கடலுார் அடுத்த பில்லாலி அருந்ததியர் நகரை சேர்ந்தவர் சந்திரா, 62; இவர், கடந்த பல ஆண்டுகளாக பாலுார் பண்ணை குச்சிப்பாளையத்தில் தங்கி சலவை தொழில் செய்து வந்தார். கடந்த 6 ம் தேதி இரவு கடலுார்-பாலுார் சாலையில் குச்சிப்பாளையத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த பைக் மோதியது. காயமடைந்த அவர், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு சந்திரா இறந்தார்.நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ