உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல் வயல்களில் பன்றிகள் அட்டகாசம்

நெல் வயல்களில் பன்றிகள் அட்டகாசம்

விருத்தாசலம், : மணவாளநல்லுாரில் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் வயல்களில் காட்டுபன்றிகள் அட்டகாசம் செய்து வருவதால், கட்டுப்படுத்த வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கிராமத்தில், 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் வயல்களில், தினசரி இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்து நெற்பயிர்களை நாசம் செய்கின்றன.இதனால் அப்பகுதியில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும், இதுகுறித்து, கடந்த சம்பா நெல் சாகுபடி காலத்தில், வேளாண்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, உள்ளிட்ட துறைகளுக்கு புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது குறுவை சாகுபடியில் இதேநிலை தொடர்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.எனவே, மணவாளநல்லுாரில், அறுவடைக்கு தயாராக உள்ள நெல் வயல்களில், காட்டு பன்றிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை