உள்ளூர் செய்திகள்

பிரதோஷ வழிபாடு

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை 4:00 மணியளவில், நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு 12 வகையான பொருட்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. பின்னர், நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ மாலைகள் சாற்றி மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பால், தயிர் உள்ளிட்ட அபிேஷக பொருட்களை வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.இதேபோல், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள ஏகநாயகர், தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர் கோவில், நல்லுார் வில்வனேஸ்வரர் கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ