உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெருமாள் கோவிலில் நாளை பூவங்கி சேவை

பெருமாள் கோவிலில் நாளை பூவங்கி சேவை

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை ஸ்ரீரங்கநாத பெருமாள் சமேத ரங்கநாயகி தாயார் கோவிலில் நாளை (2ம் தேதி) 3ம் வெள்ளியன்று காலை 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம். 8:00 மணிக்கு காலசந்தி பூஜை, 9:00 மணிக்கு மூலவர் ரங்கநாயகி தாயார், உற்சவர் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. பகல் 12:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை. மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு , மாலை 6:00 மணிக்கு மூலவர், உற்சவர் பெருமாள் பூவங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இரவு 8:00 மணிக்கு உற்சவர் ரங்கநாயகி தாயார் உள்புறப்பாடும், இரவு 9:30 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ