உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் பஸ் நிலையத்தில் ரூ.4.50 லட்சம் நகை திருட்டு 

கடலுார் பஸ் நிலையத்தில் ரூ.4.50 லட்சம் நகை திருட்டு 

கடலுார் : கடலுார் பஸ் நிலையத்தில் பெண் பயணியிடம் 9 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார், மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் மனைவி கணிவு,30; இவர், கடலுார் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் தம்மனாம்பேட்டை செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.சற்று நேரத்தில், அவரது பேக்கில் வைத்திருந்த வளையல், கை காப்பு, மோதிரம் என 9 சவரன் நகைகள் காணாததால் அதிர்ச்சியடைந்தார். நகையின் மதிப்பு ரூ.4.50 லட்சம் ஆகும்.இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை