உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செம்மண் கிராவல் கடத்தல்: 6 டிப்பர் லாரிகள் பறிமுதல்

செம்மண் கிராவல் கடத்தல்: 6 டிப்பர் லாரிகள் பறிமுதல்

நடுவீரப்பட்டு: கடலுார் எஸ்.பி.,ராஜாராம் உத்திரவின் பேரில் நடுவீரப்பட்டு இன்ஸ்பெக்டர் கண்ணன்,சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வி.பெத்தாங்குப்பம்-குழந்தைக்குப்பம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக செம்மண் கிராவல் ஏற்றி வந்த 6 டிப்பர் லாரிகள் மற்றும் பதிவெண் இல்லாத டோசர் ஆகிய வாகனங்களை சோதனை செய்தனர். சோதனையில் அரசு அனுமதி மற்றும் உரிமம் பற்று சீட்டு இல்லாமல் செம்மண் கிராவல் கடத்திய வந்தது தெரியவந்தது.நடுவீரப்பட்டு போலீசார் 6 டிப்பர் லாரி மற்றும் ஒரு டோசரை பறிமுதல் செய்து லாரி ஓட்டி வந்த நடுவீரப்பட்டு நைனாப்பேட்டை பரணிகுமார்,28; மாவடிப்பாளையம் மேற்கு தெரு தனசிங்கு,28; பெரியநரிமேடு குணசீலன்,36; குறிஞ்சிப்பாடி அடுத்த திம்மராவுத்தன்குப்பம் மேல்தெரு சிவக்குமார்,45; பல்லவராயநத்தம் மாரியம்மன்கோவில் தெரு ஸ்ரீதர்,24; பத்திரக்கோட்டை எவர்ணமூர்த்தி,53; பீகார் மாநிலம் பிலோட்டியை சேர்ந்த சுரேஷ் விஸ்வகர்மா,37; ஆகிய 7 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை