உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுத்துக்குளம் சாலை கந்தல் வாகன ஓட்டிகள் அவதி

சுத்துக்குளம் சாலை கந்தல் வாகன ஓட்டிகள் அவதி

கடலுார்: சுத்துக்குளம் பகுதியில் போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.கடலுார் சுத்துக்குளம் ரோடு ரயில்வே கேட் அருகில் உள்ள சாலை வழியாக வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பு மக்கள் சென்று வருகின்றனர். இச்சாலை தற்போது சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.எனவே, இச்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ