உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நீர்வளத்துறை சார்பில்  மரக்கன்று நடும் விழா 

நீர்வளத்துறை சார்பில்  மரக்கன்று நடும் விழா 

சிதம்பரம்: உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி சிதம்பரம் நீர்வளத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது. உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி, நேற்று காலை சிதம்பரம் அடுத்துள்ள, கண்ணங்குடி முத்துநகர் பகுதியில், சிதம்பரம் நீர்வளத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. சிதம்பரம் நீர் வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் நட்டார். அப்போது கண்ணங்குடி ஊராட்சி தலைவர் ராஜேஷ், நீர் வளத்துறை உதவியாளர் பூஜாவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி