உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிண்டல் செய்த இருவர் கைது

கிண்டல் செய்த இருவர் கைது

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் இளம்பெண்களை கிண்டல் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.நடுவீரப்பட்டு காலனி புதுமனை பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ், 44; இவரது இரண்டு மகள்களும் நடுவீரப்பட்டில் உள்ள கடையில் வேலை செய்து விட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது நடுவீரப்பட்டு காலனி ஓடை அருகே வரும் போது விலங்கல்பட்டை சேர்ந்த பாலசுந்தரம்,39; மணிகண்டன்,33; ஆகிய இருவரும் ராமதாஸ் மகள்ளை ஆபாசமாக பேசி கிண்டல் செய்தனர்.இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசில் ராமதாஸ் கொடுத்த புகாரின் பேரில் பாலசுந்தரம், மணிகண்டன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி