உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

நெல்லிக்குப்பம்: மது போதையில் வந்தவரை மனைவி கண்டித்ததால் கணவர் துாக்குப் போட்டு இறந்தார்நெல்லிக்குப்பம் கீழ்பாதியை சேர்ந்தவர் ரமேஷ்,52; விவசாய கூலி தொழிலாளி.இவர் தினமும் மது அருந்திவிட்டு வருவது வழக்கம்.இதை அவரது மனைவி கண்டித்துள்ளார்.நேற்று முன்தினமும் மது போதையில் வீட்டுக்கு வந்த கணவர் ரமேஷை அவரது மனைவி கண்டித்தார்.இதனால் மனமுடைந்த ரமேஷ் வீட்டில் உள்ள அறையில் துாக்குப்போட்டுக்கொண்டார். அக்கம் பக்கத்தினர் ரமேஷை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை