உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எலிபேஸ்ட் தின்று பெண் தற்கொலை

எலிபேஸ்ட் தின்று பெண் தற்கொலை

பண்ருட்டி, : ' கணவர் உயிரிழந்த மனவேதனையில், எலிபேஸ்ட் தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.பண்ருட்டி அடுத்த திருவதிகை, பழைய கடலுார் மெயின்ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் பிரியதர்ஷிணி, 25; பி.எட்., படித்துள்ளார். இவருக்கு இதே பகுதியை சேர்ந்த கோகுல் என்பவருக்கும் கடந்த 2023 ஜனவரி 7 ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் கோகுல் கடந்த மே 16 ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதனால் மனவேதனையில் இருந்த பிரியதர்ஷிணி, கடந்த 4ம் தேதி எலிபேஸ்ட் தின்றார்.வயிற்று வலி ஏற்பட்டதால் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். நேற்று உயிரிழந்தார். பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்