உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

நடுவீரப்பட்டு : பண்ருட்டியில் ரயிலில் அடிபட்டு டீக்கடை தொழிலாளி இறந்தார்.பண்ருட்டி, ஆர்.எஸ்.மணி நகர், 5வது தெருவைச் சேர்ந்தவர் காதர்பாஷா, 35; டீக்கடையில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.இந்நிலையில், நேற்று காலை பண்ருட்டி யூனியன் ஆபீஸ் அருகே ரயில் பாதை அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.தகவலறிந்த கடலுார் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று காதர்பாஷா உடலைக் கைப்பற்றி பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி ரயிலில் அடிபட்டு இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை