உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழிலாளி தாக்கு; கடலுாரில் 2 பேர் கைது

தொழிலாளி தாக்கு; கடலுாரில் 2 பேர் கைது

கடலுார் : பணம் தர மறுத்த தொழிலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். குறிஞ்சிப்பாடி அடுத்த த.பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன்,31; கொத்தனார். இவர், கடந்த 28ம் தேதி, வேலையை முடித்து விட்டு கடலுார் பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்த பழனி மகன் உதயா, 23; ராஜேந்திரன், 35; ஆகியோர் குடிபோதையில், நடராஜனிடம் 500 ரூபாய் பணம் கேட்டனர். நடராஜன் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த உதயா, ராஜேந்திரன் ஆகியோர் நடராஜனை சரமாரியாக தாக்கினர். இதில், காயமடைந்த அவர், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.புகாரின் பேரில், கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து உதயா, ராஜேந்திரனை கைது செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை