உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருதை கோவில்களில் ஆடிப்பெருக்கு வழிபாடு

விருதை கோவில்களில் ஆடிப்பெருக்கு வழிபாடு

விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் ஆடிப்பெருக்கையொட்டி, சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர், சண்முக சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, ராஜ அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், வெட்டிவேர் மாலைகள் அணிவித்து ஆராதனை நடந்தது. மாலையில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். இதேப் போன்று, கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர், ஏகநாயகர், தென்கோட்டைவீதி மோகாம்பரி அம்மன், சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமா னோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை