உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிக்க பணம் தர மறுப்பு பெரியப்பாவை தாக்கியவர் கைது

குடிக்க பணம் தர மறுப்பு பெரியப்பாவை தாக்கியவர் கைது

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே பெரியப்பாவை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.நடுவீரப்பட்டு அடுத்த வெள்ளக்கரை காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி, 65; இவரது தம்பி வேல்முருகன் மகன் ஆகாஷ், 28; குடிப்பழக்கம் உடைய இவர், தனது பெரியப்பாவிடம் குடிக்க பணம் கேட்டார். அவர் பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த ஆகாஷ், தட்சணாமூர்த்தியை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை