உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா விற்ற பெட்டிக்கடை உரிமையாளர்கள் கைது

குட்கா விற்ற பெட்டிக்கடை உரிமையாளர்கள் கைது

விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே குட்கா பொருட்கள் விற்ற பெட்டிக்கடை உரிமையாளர்களை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். சாத்தியம் கிராமத்தைச் சேர்ந்த சபியுல்லா, 49; படுகாளநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ரவி, 43, ஆகியோர் தனது பெட்டிக்கடையில், குட்கா பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, சபியுல்லா, ரவி ஆகியோரை கைது செய்தனர். குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !