உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாலம் கட்டும் பணி சேர்மன் துவக்கி வைப்பு

பாலம் கட்டும் பணி சேர்மன் துவக்கி வைப்பு

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த வல்லம் ஊராட்சியில் ஒன்றிய பொதுநிதியில் சிறியபாலம் கட்டும் பணியை ஒன்றிய சேர்மன் துவக்கி வைத்தனர். பண்ருட்டி அடுத்த வல்லம் ஊராட்சியில் ஒன்றிய பொதுநிதியில் சிறுபாலம் அமைக்கும் பணிக்கு ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், பாலம் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.இதில் பி.டி.ஒ.சங்கர், ஒன்றிய கவுன்சிலர் அருள்முருகன், தலைவர் செல்வராஜ் , சொரத்துார் ஊராட்சிமன்ற தலைவர் கவிதாஜனார்த்தனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ