உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காணூர் மின்துறை அலுவலகத்தில் நாளை நுகர்வோர் குறைகேட்பு

காணூர் மின்துறை அலுவலகத்தில் நாளை நுகர்வோர் குறைகேட்பு

சிதம்பரம் : சிதம்பரம் அடுத்த காணூர் மின்துறை அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் நாளை (30ம் தேதி) நடக்கிறது. இதுகுறித்து மின்துறை சிதம்பரம் செயற்பொறியாளர் செல்வசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிதம்பரம் கோட்ட மின்துறை சார்பில் கோட்ட மேற்பார்வை பொறியாளர் ரவிராம் தலைமையிலும், சிதம்பரம் செயற் பொறியாளர் செல்வசேகர் முன்னிலையில் நாளை (30ம் தேதி) காணூர் பிரிவு அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. சிதம்பரம் கோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர்கள் பங்கேற்று பயன் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !