உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மின் கம்பத்தால் விபத்து அபாயம்

 மின் கம்பத்தால் விபத்து அபாயம்

புவனகிரி: மின்கம்பங்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது. புவனகிரி பகுதியில் மின் வயரில் மரக்கிளைகள் மற்றும் செடி, கொடிகள் படர்ந்துள்ளன. குறிப்பாக ஆதிவராக நல்லுாரில் உள்ள சில பகுதியில் மின் கசிவினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து மின்துறையினர் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த பகுதிகளில், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதற்குள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி