| ADDED : நவ 27, 2025 04:50 AM
கடலுார்: கடலுார், வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதுச்சேரி 'தினமலர் -- பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து நடத்திய பதில் சொல், பரிசு வெல் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. புதுச்சேரி 'தினமலர் -- பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து கடலுார் வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வினாடி வினா போட்டி நடத்தியது. பள்ளி தலைமை ஆசிரியர் பிரணவமாறன் தலைமை தாங்கினார். போட்டியில் தேர்வான 16 மாணவர்கள், 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு தகுதிச்சுற்று நடந்தது. போட்டியின் இறுதியில் பிளஸ் 1 மாணவிகள் மகாலட்சுமி, விஷாலி முதலிடமும், பிளஸ் 1 மாணவிகள் ரேகா, நஸ்ரின் பானு இரண்டாமிடமும் பெற்றனர். வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பிரணவமாறன் சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினார். பட்டம் இதழ் பொறுப்பாசிரியர் ரமாபிரபா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வினாடி வினா போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி அளவில் வெற்றிபெற்ற இரு அணிளும் மெகா வினாடிவினா போட்டியில் பங்கேற்க தேர்வாகினர்.