உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை 20 கிராம விவசாயிகள் கோரிக்கை

 வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை 20 கிராம விவசாயிகள் கோரிக்கை

பெண்ணாடம்: நந்தப்பாடி - மோசட்டை இடையே வெள்ளாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை கட்ட, 20 கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெண்ணாடம் மற்றும் முருகன்குடி, துறையூர், நந்தப்பாடி, சத்தியவாடி, மோசட்டை, குறுக்கத்தஞ்சேரி, கிளிமங்கலம், டி.வி.புத்துார் உட்பட, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளாற்றங்கரையோரம் உள்ளன. இங்குள்ள விளைநிலங்களில் மோட்டார் பாசனம் மூலம் நெல், கரும்பு மற்றும் வாழை, கத்தரி, கொத்தவரை, முருங்கை உள்ளிட்ட தோட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். பருவநிலை மாற்றம் காரணமாக போதிய மழையின்றி வெள்ளாற்றில் நீர்வரத்து குறைந்து, நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக சரிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் சாகுபடி காலங்களில் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்படுவது தொடர்கிறது. இதையொட்டி, நந்தப்பாடி - மோசட்டை இடையே வெள்ளாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை கட்ட மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை