உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மாஜி கவுன்சிலர் கட்டடத்திற்கு சீல்

 மாஜி கவுன்சிலர் கட்டடத்திற்கு சீல்

விருத்தாசலம்: நகராட்சி அனுமதியின்றி முன்னாள் நகராட்சி கவுன்சிலர் கட்டிய கட்டடத்திற்கு, ஐகோர்ட் உத்தரவின்படி, நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். விருத்தாசலம் ஜங்ஷன் சாலை, மாரியம்மன் கோவில் தெருவில் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சம்சுதீன், என்பவர் நகராட்சி அனுமதியின்றி புதிய கட்டடம் கட்டி வந்தார். இதுகுறித்து, விருத்தாசலத்தை சேர்ந்த செல்வம் என்பவர் ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில், கடந்த ஜூலை, 8ம் தேதி கட்டடத்தின் மீது 8 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அதன்பேரில், நகரமைப்பு அலுவலர் செல்வம், நகரமைப்பு ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள், போலீசார் பாதுகாப்புடன், நகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்திற்கு நேற்று 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை