உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனைவியை கொன்று கணவன் தற்கொலை

மனைவியை கொன்று கணவன் தற்கொலை

விருத்தாசலம்: மனைவியை கொலை செய்து கணவர் தற்கொலை செய்து கொண்டார். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த குருக்கத்தஞ்சேரியை சேர்ந்தவர் செல்வராஜ், 60; விவசாயி. மனைவி ராமாயி, 48. மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகள்களுக்கு திருமணமான நிலையில், மகன் சென்னையில் பணிபுரிகிறார். தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, வீட்டில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தனர். விசாரணையில், வழக்கம்போல ஏற்பட்ட குடும்ப தகராறில் ஆத்திரமடைந்த செல்வராஜ், மனைவியை தாக்கியதில் அவர் இறந்துள்ளார். அதிர்ச்சியடைந்த செல்வராஜ் துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை