| ADDED : நவ 11, 2025 06:28 AM
கடலுார்: கடலுாரில், தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கூத்தப்பாக்கம் கிளை மாதாந்திர கூட்டம் நடந்தது. கிளைத் தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். சம்பத் முன்னிலை வகித்தார். உறுப்பினர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். பொருளாளர் கணேசன் பேசினார். பொதுச் செயலாளர் பிரணதார்த்திஹரன், செயற்குழு உறுப்பினர்கள் பாலகுரு, பக்தவத்சலம், மகளிரணி செயலாளர் அலமேலுஸ்ரீவத்சன், வெங்கட்ராமன், ராமகிருஷ்ணன், ராமநாதன், சங்கரன், இணை செயலாளர் பாஸ்கரன், ஜானகி, காவேரி கருத்துரையாற்றினர். பண்ருட்டியில் அடுத்த மாதம் நடக்க உள்ள மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்வது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பாலகுரு நன்றி கூறினார்.