உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அங்காளம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்

அங்காளம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்

புவனகிரி: புவனகிரியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் இந்து சயம அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இக்கோவில் விழா குழுவினர் நியமித்து அதன் ஒருங்கிணைப்பாளர் ரத்தினசுப்ரமணியன் தலைமையில் செயல் அலுவலர் சரண்யா மேற்பார் வையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.இக்கோவில் கும்பாபிேஷகம் வரும் 22 ம் தேதி நடக்கிறது. பல்வேறு அபிேஷகங்கள் யாக சாலை பூஜைகள் நடந்து வரும் நிலையில், நேற்று காலை சுவேத நதியில் புனித தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஒட்டகம், யனை, குதிரையில் தீர்த்தத்துடன், பெண்கள் முளைப்பாரி சுமந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.அப்போது தேவக்கோட்டை அபிரசமி குழுவினர் பக்திப்பாடல், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், வானவேடிக்கை முழங்க கோவிலை சென்றைடைந்தனர். பின்னர் சிறப்பு அபிேஷகம் செய்து யாாகசலையில் முறைப்பாரியுடன் தீர்த்தத்தை இறக்கி வைத்து குலவிப்பாடினர்.இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை