உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோவில் விழாவில் வெடி விபத்து ஒருவர் பலி: முதியவர் படுகாயம்

கோவில் விழாவில் வெடி விபத்து ஒருவர் பலி: முதியவர் படுகாயம்

வேப்பூர், : வேப்பூர் அருகே கோவில் விழாவில் நடந்த வெடி விபத்தில் ஒருவர் இறந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த அரியநாச்சி கிராமத்தில் மகாசிவராத்தியையொட்டி, நேற்று முன்தினம் இரவு பெருமாள் கோவில் முன் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதேபகுதியை சேர்ந்த பெரியசாமி,55; வாணவெடி விடத் துவங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக, அவர் கையில் வைத்திருந்த வாணவெடிகள் மீது தீப்பொறி விழுந்ததில், வாண வெடிகள் வெடித்து சிதறியது. அதில் படுகாயமடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். ராமலிங்கம்,65; ஆபத்தான நிலையில் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.வெடிவிபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை