உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புத்தேரி கோவிலில் பிரதோஷ வழிபாடு

புத்தேரி கோவிலில் பிரதோஷ வழிபாடு

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், சந்திர மவுலீஸ்வரர் சாமிக்கு நேற்று பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.இதையொட்டி, காலை 9:30 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்; 10:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள சந்திர மவுலீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர், திரவியப்பொடி ஆகியவைகளால் அபிஷேகம்; 10:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.இதேபோன்று, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில், இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ