உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு கல்லுாரியில் கருத்தரங்கு

அரசு கல்லுாரியில் கருத்தரங்கு

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு கல்லுாரி மாணவர்களுக்கு, போட்டித் தேர்வுகளில் பங்கேற்பது குறித்து கருத்தரங்கு நடந்தது.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி விலங்கியல் துறை மாணவர்களுக்கு, அரசின் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி முதல்வர் ராஜவேல் தலைமை தாங்கினார். பேராசிரியர் ராஜசேகரன் வரவேற்றார்.துறைத் தலைவர் செந்தில்குமார் வாழ்த்தி பேசினார். வணிகவரித்துறை துணை கமிஷனர் லாவன்யா போட்டித்தேர்வுகளில் பதட்டம் இல்லாமல் பங்கேற்பது, பதிலளித்தல் குறித்து விளக்கி பேசினார். பேராசிரியர்கள் இளங்கோவன், பிரவீன்சாபு உட்பட மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை