உள்ளூர் செய்திகள்

திருக்கல்யாணம்

விருத்தாசலம்: விருத்தாசலம் கம்பர் தெருவில் உள்ள ஆதி பரமேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.விருத்தாசலம் கம்பர் தெருவில், ஆதி மாரியம்மன் சமேத ஆதி பரமேஸ்வரர் கோவிலில் காரடையான் நோம்பு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி, காலை 7:30 மணியளவில், சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியதும், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மேல் நடந்த சுமங்கலி பூஜையில் 108 பெண்கள் பங்கேற்று, விளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு சுமங்கலி பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை