உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பிச்சாரவத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: படகுசவாரி செய்து கொண்டாட்டம்

 பிச்சாரவத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: படகுசவாரி செய்து கொண்டாட்டம்

கிள்ளை: புத்தாண்டையொட்டி நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில், உலக புகழ்பெற்ற வன சுற்றுலா மையம் உள்ளது. இங்கு, மாங்குரோவ்ஸ் எனும் சுரபுண்ணை தாவரங்கள் மற்றும் மூலிகை தாவரங்கள் நிறைந்துள்ளது. இதனால், பிச்சாவரத்திற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து, படகில் வனக்காடுகளுக்கு சென்று இயற்கை அழகை கண்டுகளித்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பிச்சாவரத்திற்கு, வந்து குவிந்தனர். காலை முதலே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால், வனக்காடுகளை சுற்றிப்பார்க்க படகில், அனைவரும் ஒரே நேரத்தில் செல்ல முடியாததால், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் காத்திருந்து, படகில் வனக்காடுகளுக்கு சென்று இயற்கை அழகை கண்டு ரசித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ