உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 4,560 அடி உயர பர்வத மலையில்இடி தாக்கி கோபுர சிற்பம் சேதம்

4,560 அடி உயர பர்வத மலையில்இடி தாக்கி கோபுர சிற்பம் சேதம்

கலசப்பாக்கம்;கலசப்பாக்கம் அருகே, 4,560 அடி உயர மலை உச்சியிலுள்ள பர்வத மலையில், இடி தாக்கி, கோபுர சிற்பம் சேதமடைந்தது.திருவண்ணாமலை மாவட் டம், கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலத்தில், 4,560 அடி உயர பர்வதமலையில், பிரம்மராம்பிகை அம்மன் உடனுறை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, பவுர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோஷ காலங்களில், பக்தர்கள் தங்கி பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.கோவில் வளாகத்தில் இருந்த, 3 இடி தாங்கிகளில், 2 பழுதடைந்துள்ளன. நேற்று முன்தினம் இரவு பலத்த இடி மின்னலுடன் கூடிய மழையில், கோபுரத்திலுள்ள காவல் தெய்வ சிலை இடி தாக்கி உடைந்து சேதமானது. கோவில் சுற்றுச்சுவரில் விரிசல் மற்றும் சோலார் விளக்கு சேதமடைந்தது. சேதமான சிலை உள்ளிட்டவற்றை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த, 2010ம் ஆண்டு, இக்கோவிலில் இடி தாக்கியதில், 4 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி