உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பட்டுக்கூடு அங்காடியில் ரூ.8 லட்சத்துக்கு ஏலம்

பட்டுக்கூடு அங்காடியில் ரூ.8 லட்சத்துக்கு ஏலம்

தர்மபுரி : தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று, 8 லட்சம் ரூபாய்க்கு பட்டுக்கூடு ஏலம் நடந்தது.தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று விவசாயிகளின் வருகை குறைந்து காணப்பட்டது. கடந்த வாரத்தில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்றனர். பின் விவசாயிகள் வருகை குறைந்து, நேற்று முன்தினம், 45 பேரும் நேற்று, 25 பேரும் ஏலத்துக்கு வந்திருந்தனர். இவர்கள், 52 குவியல்களாக, 1,756 கிலோ வெண்பட்டுக்கூடுகளை கொண்டு வந்தனர். இவற்றின் மொத்த மதிப்பு, 8 லட்சத்து, 12 ஆயிரத்து, 50 ரூபாய். நேற்று ஒருநாள் நடந்த ஏலத்தால் அரசுக்கு, 12 ஆயிரத்து, 190 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ