உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாரியம்மன் கோவில் திருவிழா

மாரியம்மன் கோவில் திருவிழா

நல்லம்பள்ளி :தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதுார் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பக்தர்கள் தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதுாரில், மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த, 10- ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபடும் நிகழ்ச்சி நடந்தது. 22ல் பால்குடம் ஊர்வலமாக எடுத்து சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. 24ல் காளியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நிகழ்ச்சி மற்றும் அம்மனுக்கு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக அலகு குத்தியும், தலைமீது தீச்சட்டி எடுத்தும், மாவிளக்கு எடுத்தும், வழிப்பட்டனர். நேற்று காலை தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தேர் இழுத்தனர். இதில், இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை மஞ்சள் நீராட்டுதலுடன் கோவில் விழா நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ