உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இலவச வீட்டுமனை பட்டா இரு கிராம மக்கள் மனு

இலவச வீட்டுமனை பட்டா இரு கிராம மக்கள் மனு

தர்மபுரி: இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடுகளுக்கு பட்டா கேட்டு, 2 கிராம மக்கள், நேற்று தர்மபுரி கலெக்டர் சாந்தியிடம் மனு அளித்தனர்.இது குறித்து, மனுவில் தெரிவித்துள்ளதாவது:தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, லிங்கநாய்க்க-னஹள்ளி பஞ்.,கு உட்பட்ட தாஸ் நகரில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இங்குள்ளவர்கள் ஒரே கூரை வீட்டில் 2, 3 குடும்பங்களாக வசிக்கிறோம். மழை காலங்களில் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். அதேபோல், பென்னா-கரம் அடுத்த, ஓரப்பாச்சியூரில், 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, 50 குடும்பத்தினர் வீடு கட்டி வசிக்கிறோம். இதில், இங்கு குடியி-ருக்கும், 35 வீடுகளுக்கு பட்டா இல்லை. எனவே, எங்கள் வீடுக-ளுக்கு பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை