ஒகேனக்கல்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவி-ரத்தால், கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி, நீர்வரத்து அதி-கரித்துள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதி, தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், கபினி அணை-யிலிருந்து வினாடிக்கு, 5,000 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையி-லிருந்து வினாடிக்கு, 14,522 கன அடி என மொத்தம், 19,522 கன அடி உபரி நீர், காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பா-ளையம், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்-படி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று காலை, 10:00 மணிக்கு வினாடிக்கு, 19,000 கன அடியாக இருந்த நீர்வ-ரத்து, நேற்று மாலை, 6:00 மணிக்கு, 28,000 கன அடியாக அதிக-ரித்தது. இதனால் ஒகேனக்கல்லில், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி, மெயின் பால்ஸ், சினி பால்ஸ் உள்ளிட்ட அருவி-களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று நீர்வரத்து அதி-கரிப்பால், காவிரியாற்றில் பரிசல் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்-வாகம் தடை விதித்துள்ளது. தொடர்ந்து, 32 வது நாளாக, அரு-வியில் குளிக்க மாவட்ட நிர்வாகத்தின் தடை தொடர்கிறது.