உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வீதியில் குவியும் குப்பையால் அவதி

வீதியில் குவியும் குப்பையால் அவதி

தர்மபுரி: தர்மபுரி நகராட்சி, 6வது வார்டு பாபாசாகிப் தெருவில் புதிய சாக்-கடை கால்வாய் அமைக்கப்பட்டது. இதில், தற்போது பல இடங்-களில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதை சுத்தப்படுத்த நகராட்-சிக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், நகராட்சி துாய்மை பணியாளர்கள் யாரும் இங்கு துாய்மை பணி செய்வ-தில்லை. நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. வீதியின் பல இடங்களில் கழி-வுநீர் மற்றும் குப்பை தேங்கி சுகாதார மற்ற நிலை உள்ளது. எனவே, இப்பகுதி மக்களின் நலன்கருதி, சாலையில் குவித்து வைத்துள்ள குப்பை மற்றும் சாக்கடை கழிவுகளை அகற்ற, அதி-காரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி