உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில், தட்சிணகாசி கால-பைரவர் கோவிலில் நேற்று தேய்ப்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு, 108 வகை நறுமண பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, 1,008 ஆகம பூஜை, வேத பாராயணம் மற்றும் சிறப்பு அர்ச்சனை நடந்தது. உபகார பூஜைகளுடன், சிறப்பு அலங்கார சேவை, மஹா தீபாராதனையை தொடர்ந்து, காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்-களை சேர்ந்த பக்தர்கள், கர்நாடக மாநில பக்தர்கள் சுவாமி தரி-சனம் செய்தனர். இதில், கோவிலுக்கு வந்த பக்தர்கள் வெண்பூச-ணியில் விளக்கேற்றி வழிப்பட்டனர். தொடர்ந்து, நேற்றிரவு கோவில் வளாகத்தில், 108 கிலோ மிளகு, 1,008 கிலோ மிளகாய் கொண்டு, சத்ரு சம்ஹார யாகம் மற்றும் சுவாமி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்-துறை அலுவலர்கள், கோவில் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ