வெவ்வேறு இடங்களில் 2 மாணவியர் மாயம்
தர்மபுரி தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த கெட்டுப்பட்டியை சேர்ந்த, 17 வயது மாணவி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு மாணவி வீட்டில் இருந்து மாயமானார். புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர். அரூர் அடுத்த கீரைப்பட்டி புதுாரை சேர்ந்த, 17 வயது மாணவி, கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் நர்சிங் கல்லுாரியில், பி.எஸ்சி., முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த, 18ல் காலை, 11:00 மணிக்கு வீட்டில் இருந்து மாணவி மாயமானார். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.