உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மின்சாரம் தாக்கி ஓட்டல் ஓனர் பலி

மின்சாரம் தாக்கி ஓட்டல் ஓனர் பலி

அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி அருகேவுள்ள வடக்கு தெரு கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன், 38. இவர், நல்லம்பள்ளி அருகே, பெங்களுரு -- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று காலை, 11:30 மணிக்கு வடக்கு தெரு கொட்டாவூரில் உள்ள வீட்டில் தன் ஆடைகளை அயரன் செய்து கொண்டிருந்தார். அப்போது, அயரன் பாக்சிலிருந்து மின்சாரம் தாக்கியதில், கணேசன் துாக்கி வீசப்பட்டார். உடனடியான அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கணேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !