உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஹிந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

ஹிந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

சாணார்பட்டி: -திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் சிலைகளை பிரதிஷ்ட செய்ய மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி சாணார்பட்டியில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தொண்டரணிதலைலைர் மோகன் முன்னிலை வைத்தார். மாவட்டத் தலைவர் நாகராஜ் பேசினார். மாநிலச் செயலாளர் மணிகண்டன்,வினோத்குமார், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட இளைஞர் செயலாளர் சிவக்குமார், மாநில தொண்டரணி பொதுச் செயலாளர் அண்ணாதுரை கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை