உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர்கள் விடுதியில் சேர அழைப்பு

மாணவர்கள் விடுதியில் சேர அழைப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி அறிக்கை : பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் மாணவர்களுக்கென 49 விடுதிகள் செயல்படுகின்றன.பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 வரை, கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐ.டி.ஐ., ,பாலிடெக்னிக் மாணவர்களும் சேர தகுதி உடையவர்கள்.பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ2லட்சம் மிகாமல் இருக்க வேண்டும். கல்வி நிலையம் 8 கி.மீட்டருக்குள் இருக்க வேண்டும். துார விதி மாணவிகளுக்கு பொருந்தாது.கல்லுாரி மாணவர்கள் ஜூன் 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை