உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பணம் கையாடல் மாநகராட்சி ஊழியர் சஸ்பெண்ட்

பணம் கையாடல் மாநகராட்சி ஊழியர் சஸ்பெண்ட்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் வசூலிக்கப்படும் வரிப்பணம், மறுநாள் காலை வங்கியில் செலுத்தப்படும். இங்கு இளநிலை உதவியாளராக உள்ள திண்டுக்கல் நெட்டுத் தெருவைச் சேர்ந்த சரவணன், நேற்று வரிப்பணம், 6 லட்சத்தில் 4 லட்சம் ரூபாயை செலுத்திவிட்டு, 2 லட்சம் ரூபாயை கையாடல் செய்தார்.கணக்கு பிரிவு அலுவலர்கள் கணக்குகளை சரிபார்த்த போது, சரவணன் கையாடல் செய்தது தெரிந்தது. இதை தொடர்ந்து, சரவணனை சஸ்பெண்ட் செய்து, கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி