உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பஞ்சு மில்லில் தீ விபத்து

பஞ்சு மில்லில் தீ விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியில் மின்கசிவால் தனியார் பஞ்சுமில்லில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி அணைத்தனர்.திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவர் செட்டிநாயக்கன்பட்டியில் சொந்தமாக பஞ்சு மில் நடத்துகிறார். நேற்று அதிகாலை 4:30 மணிக்கு பஞ்சுமில்லில் தீப்பற்றி எரிந்தது. திண்டுக்கல் தீயணைப்பு அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டநிலையில் மாவட்ட அலுவலர் கணேசன், உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் அங்கிருந்த பொருட்கள் முழுவதும் சேதமானது. விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. பொருட்கள் சேதமானது. தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ