உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புங்கம்பாடி கருப்பணசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

புங்கம்பாடி கருப்பணசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே ராகலாபுரம் ஊராட்சி புங்கம்பாடி மகா கருப்பண்ணசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இவ்விழாவையொட்டி நேற்று திருச்செந்தூர்,ராமேஸ்வரம், அழகர் கோயில் மலை, திருமலைகேணி உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள் , முளைப்பாரி ஊர்வலமாக கோயில் யாகசாலைக்கு எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து 2 கால யாக பூஜைகள்,நவபாஷனத்தால் செய்யப்பட்ட யந்திர பிரதிஷ்டை நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளம் முழங்க தீர்த்தக் குடங்கள் எடுத்த செல்ல சிவாச்சாரியார்கள் வேத மந்திரத்துடன் கலசங்களில் புனித நீர் ஊற்ற கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை மேட்டுக்கடை டாக்டர் திருவேங்கடஜோதி பட்டாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை