உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.4.66 கோடி வரிப்பணம் கையாடல்; மாநகராட்சி அலுவலர் 2 பேர் கைது

திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.4.66 கோடி வரிப்பணம் கையாடல்; மாநகராட்சி அலுவலர் 2 பேர் கைது

திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் செய்ததாக கணக்குப் பிரிவு இளநிலை உதவியாளர் சரவணன், கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று இதில் தொடர்புடைய நிர்வாக அலுவலர் வில்லியம், கண்காணிப்பாளர் சாந்தியை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் நெட்டு தெருவை சேர்ந்தவர் சரவணன்35. இவர் திண்டுக்கல் மாநகராட்சியில் கணக்குப் பிரிவு இளநிலை உதவியாளராக பணியாற்றினார். சரவணன், மக்கள் மாநகராட்சிக்கு செலுத்திய வரி பணம் ரூ.4.66 கோடியை வங்கியில் செலுத்தாமல் போலியான ஆவணங்கள் தயார் செய்து கையாடல் செய்தார். இதை அறிந்த மாநகராட்சி நிர்வாகம் சரவணன், அதை கவனிக்காத கண்காணிப்பாளர் சாந்தி, நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ், இளநிலை உதவியாளர் சதீஷ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்தது. தொடர்ந்து இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்க போலீசார் முதல் கட்டமாக சில நாட்களுக்கு முன் சரவணன், கைது செய்து விசாரித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மாநகராட்சியில் பணியாற்றும் சில அலுவலர்களுக்கு இந்த கையாடல் விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரிந்தது. இந்நிலையில் நேற்று குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய சஸ்பெண்ட் ஆன நிலையில் இருக்கும் கணக்குப் பிரிவு கண்காணிப்பாளர் சாந்தி, நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ்,ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ