உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் அரசு பஸ் கூரை பறந்த விவகாரம் இருவர் சஸ்பெண்ட்

பழநியில் அரசு பஸ் கூரை பறந்த விவகாரம் இருவர் சஸ்பெண்ட்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நேற்று முன்தினம் வீசிய காற்றில் அரசு பஸ் கூரை பறந்த விவகாரத்தில் முறையாக கவனிக்காத உதவி செயற்பொறியாளர், பராமரிப்பாளர் என இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பழநி சுற்றுவட்டாரத்தில் நேற்று முன்தினம் காற்று அதிக அளவில் வீசியது. இந்நிலையில் பழநியிலிருந்து கீரனூருக்கு மதியம் அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் புறப்பட்டது. பஸ் நரிக்கல்பட்டி அருகே வந்த போது பஸ் கூரை காற்றின் வேகம் தாங்க முடியாமல் பறந்தது. நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொடர்ந்து பயணிகள் வேறு பஸ்சில் ஏற்றி விடப்பட்டனர். போக்குவரத்து கழகம் இது போன்ற மெத்தன போக்கை கைவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து திண்டுக்கல் மண்டல போக்குவரத்து அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசு பஸ்சை முறையாக பராமரிக்காத பழநி கிளையில் பணியாற்றும் உதவி செயற்பொறியாளர், பராமரிப்பாளர் என இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sankaranarayanan
ஜூலை 25, 2024 21:16

ஆடியில் அம்மியும் பறக்கும் என்பார்கள்.ஆனால் இப்போது ஆடியில் அரசு பஸ்ஸின் கூரை பறந்திருக்கிறது


புதிய வீடியோ