| ADDED : ஆக 01, 2024 05:13 AM
வத்தலக்குண்டு: திண்டுக்கல் கல்வி மாவட்டம் உ பிரிவு குறுவட்ட குழு விளையாட்டுப் போட்டிகள் வத்தலக்குண்டு மவுன்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. 14, 17, 19 வயது வளைபந்து போட்டியில் வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, பள்ளபட்டி, அம்மையநாயக்கனுார் பகுதி பள்ளி மாணவிகள் பங்கேற்றனர். இதை மவுன்ட் சியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் நோரிஸ் நடராஜன், பள்ளி முதல்வர் ஆத்தியப்பன் துவக்கி வைத்தனர். 14 வயது தனி, இரட்டையர் பிரிவில் விருவீடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர். 17 வயது பிரிவில் நிலக்கோட்டை எச். என். யு. பி. ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வென்றனர். 19 வயதில் நிலக்கோட்டை எச்.என்.யு.பி. ஆர்., பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர்.இரண்டாம் இடத்தை 14 வயது தனி, இரட்டையர் , 17 வயது இரட்டையர் பிரிவில் அழகம்பட்டி ஆதிராவிடர் நலத்துறை பள்ளி பெற்றது. 17 வயது தனிப்பிரிவில் மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 19 வயது தனி, இரட்டையர் பிரிவு இரண்டாம் இடத்தை எச்.என். யு. பி. ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பள்ளி வென்றது.