உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன்சத்திரம் டூ கொடைக்கானலுக்கு தேவை கூடுதல் பஸ்

ஒட்டன்சத்திரம் டூ கொடைக்கானலுக்கு தேவை கூடுதல் பஸ்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்திலிருந்து பாச்சலுார் வழியாக கொடைக்கானலுக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.ஒட்டன்சத்திரத்திலிருந்து கொடைக்கானலுக்கு தினமும் காலை 6:00 மணிக்கு ஒரு அரசு பஸ் இயக்கப்படுகிறது. வடகாடு, பாச்சலுார், கே.சி பட்டி வழியாக இந்த பஸ் கொடைக்கானல் செல்கிறது. அதே பஸ் கொடைக்கானலிலிருந்து காலை 12:00 மணிக்கு ஒட்டன்சத்திரத்திற்கு புறப்படுகிறது. கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த பஸ்சை விட்டால் இப்பகுதி மக்கள் கொடைக்கானல் செல்வதற்கு பழநி,வத்தலக்குண்டு செல்ல வேண்டியுள்ளது. இதற்கு கூடுதல் செலவும் நேர விரயம் ஏற்படுகிறது. ஒட்டன்சத்திரத்திலிருந்து இன்னும் கூடுதல் பஸ் கொடைக்கானலுக்கு இயக்க அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ